Skip to main content

Saraswathi 108 Potri - சரஸ்வதி துதி

சரஸ்வதி 108 போற்றி |

Saraswathi 108 Potri Lyrics Tamil | 

சரஸ்வதி துதி

கணபதி வணக்கத்திற்கான மந்திரம்


"ஓம் கம் கணபதயே நமஹ"

 இது மிகவும் சக்தி வாய்ந்த பீஜ மந்திரம் ஆகும். இதைத் தொடர்ந்து உச்சரித்து வந்தால், மனமும் உம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நாம் தொடங்கும் அனைத்து காரியங்களும் சித்திக்கும்.


ஓம் சரஸ்வதி நமஸ்துப்யம் வரதே காமரூபிணி
வித்யாரம்பம் கரிஷ்யாமி சித்திர்பவது மே சதா

இது சரஸ்வதி தேவியை துதிக்க 

சொல்லப்படும் ஒரு எளிய மந்திர ஸ்லோகம்!

விளக்கம்: தேவி சரஸ்வதி! உனக்கு வணக்கம், வரம் தருபவளே, ஆசைகளின் வடிவானவளே கல்வி கற்க ஆரம்பிக்கிறேன். 

சரஸ்வதி என்பது அறிவு மற்றும் வித்தையின் தெய்வம். "தடங்கலற்றுச் சாரையாகப் பாயும் எண்ணங்களை ஒழுங்குபடுத்தும் ஆற்றல்" என்பதே சரஸ்வதியின் தத்துவமாகும். எவரொருவருக்குத் தடையில்லாத, சீரான ஒரே கவனம் இருக்கிறதோ அவருக்கு சரஸ்வதியின் அருள் பரிபூரணமாக உண்டு. 

எனவே "சரஸ்வதி நமஸ்துப்யம்" என்றால் சீரான எண்ணத்தை உண்டு பண்ணும் ஆற்றலுக்கு அதிபதியே உனக்கு வணக்கம் என்று அர்த்தம்(பொருள்)!

அடுத்தது வரதே காமரூபிணி, சரஸ்வதி காமரூபிணி! இச்சை இல்லாமல் ஒரு செயல் நடைபெற முடியாது. அதாவது வித்தையை கற்க விரும்புகிறவனுக்கு வித்தை மேல் இச்சையை உண்டு பண்ணும் காமரூபிணி அவள்! வித்தை மேல் காமம் இருந்தால் தான், அதனை கற்பதற்கு உரிய ஆர்வத்தைத் தூண்டும்!


Saraswathi 108 Potri 

ஓம் அறிவுருவே போற்றி

ஓம் அறியாமை தீர்ப்பாய் போற்றி

ஓம் அன்பின் வடிவே போற்றி

ஓம் அநுபூதி அருள்வாய் போற்றி

ஓம் அறிவுக்கடலே போற்றி

ஓம் அளத்தற்கு அரியவளே போற்றி

ஓம் அன்ன வாகினியே போற்றி

ஓம் அகில லோக குருவே போற்றி

ஓம் அருளின் பிறப்பிடமே போற்றி


ஓம் ஆசான் ஆனவளே போற்றி

ஓம் ஆனந்த வடிவே போற்றி

ஓம் ஆதாரசக்தியே போற்றி

ஓம் இன்னருள் சுரப்பாய் போற்றி

ஓம் இகபர சுகம் தருவாய் போற்றி

ஓம் ஈர நெஞ்சம் கொண்டாய் போற்றி

ஓம் ஈடேறச் செய்பவளே போற்றி

ஓம் உண்மைப் பொருளே போற்றி

ஓம் உள்ளத்து உறைபவளே போற்றி


ஓம் ஊமையை பேசவைத்தாய் போற்றி

ஓம் எண்ணம் நிறைவேற்றுவாய் போற்றி

ஓம் ஏடு கையில் ஏந்தியவளே போற்றி

ஓம் ஓங்கார வடிவினளே போற்றி

ஓம் கலைக் களஞ்சியமே போற்றி

ஓம் கற்போர்க்கு இனியவளே போற்றி

ஓம் கலைஞானச் செல்வியே போற்றி

ஓம் கரை சேர்க்கும் கண்ணே போற்றி

ஓம் கலைவாணித் தெய்வமே போற்றி


ஓம் காட்சிக்கு இனியவளே போற்றி

ஓம் காயத்ரியாய் அருள்பவளே போற்றி

ஓம் குருவாக உபதேசிப்பவளே போற்றி

ஓம் குறை தீர்த்தருள்வாய் போற்றி

ஓம் குணக் குன்றானவளே போற்றி

ஓம் குற்றம் பொறுப்பவளே போற்றி

ஓம் சந்தேகம் போக்குவாய் போற்றி

ஓம் சச்சிதானந்தப் பொருளே போற்றி

ஓம் சாந்த சொரூபினியே போற்றி


ஓம் சான்றோர் நெஞ்சினளே போற்றி

ஓம் சாரதாம்பிகையே போற்றி

ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி

ஓம் சித்தியளிப்பவளே போற்றி

ஓம் சுருதிக்கு ஆதாரமே போற்றி

ஓம் சுத்தஞான வடிவே போற்றி

ஓம் ஞானக்கடலானாய் போற்றி

ஓம் ஞானம் தந்தருள்வாய் போற்றி

ஓம் ஞானப்பூங்கோதையே போற்றி


ஓம் ஞானேஸ்வரியே போற்றி

ஓம் ஞானத்தின் வரம்பே போற்றி

ஓம் ஞான ஆசிரியையே போற்றி

ஓம் ஞானத்தின் காவலே போற்றி

ஓம் தவத்தில் ஆழ்ந்தவளே போற்றி

ஓம் தகைமை தருபவளே போற்றி

ஓம் தஞ்சம் அளிப்பவளே போற்றி

ஓம் தாயான தயாபரியே போற்றி

ஓம் தண்ணருள் தருவாய் போற்றி


ஓம் துதித்தவர்க்கு துணையே போற்றி

ஓம் நவமி தேவதையே போற்றி

ஓம் நவராத்திரி நாயகியே போற்றி

ஓம் நன்னெறி தருபவளே போற்றி

ஓம் நலம் அளிப்பவளே போற்றி

ஓம் நாவிற்கு அரசியே போற்றி

ஓம் நல்லவர்களின் மனமே போற்றி

ஓம் நா நயம் அருள்வாய்போற்றி

ஓம் நான்மறை நாயகியே போற்றி


ஓம் நாவில் உறைபவளே போற்றி

ஓம் நாதத்தின் தலைவியேபோற்றி

ஓம் நாத வெள்ளமானாய் போற்றி

ஓம் நித்திய ஒளிவடிவே போற்றி

ஓம் நிமலையாய் நின்றவளே போற்றி

ஓம் நித்தம் வளர்பவளே போற்றி

ஓம் நிறைவு அளிப்பவளே போற்றி

ஓம் நுட்பம் கொண்டவளே போற்றி

ஓம் பண்ணின் இசையே போற்றி


ஓம் பாட்டின் ஆதாரமே போற்றி

ஓம் பாவலர் நாடும் பண்பே போற்றி

ஓம் பிரணவ சொரூபமே போற்றி

ஓம் பிரம்மனின் நாயகியே போற்றி

ஓம் பிரம்ம ஞான வடிவே போற்றி

ஓம் பிறவிப்பிணி அறுப்பாய் போற்றி

ஓம் பூரண வடிவானவளே போற்றி

ஓம் புவனத்தைக் காப்பவளே போற்றி

ஓம் புத்தகத்தில்உறைபவளே போற்றி


ஓம் மனம்வாக்கு கடந்தவளே போற்றி

ஓம் மங்கல வடிவானவளே போற்றி

ஓம் மந்திரப் பொருளானவளே போற்றி

ஓம் மாயையை அழிப்பவளே போற்றி

ஓம் முனிவர் நெஞ்சமர்ந்தாய் போற்றி

ஓம் முற்றறிந்த அறிவே போற்றி

ஓம் முக்காலம் உணர்ந்தவளே போற்றி

ஓம் மூலமந்திர வடிவினளே போற்றி

ஓம் மூல நாளில் வந்தவளே போற்றி


ஓம் முக்தி அளிப்பவளே போற்றி

ஓம் மேதையாக்குபவளே போற்றி

ஓம் மேன்மை தருபவளே போற்றி

ஓம் யாகத்தின் பலனே போற்றி

ஓம் யோகத்தின் பயனே போற்றி

ஓம் வழித்துணை வருவாய் போற்றி

ஓம் வரம் அருள்பவளே போற்றி

ஓம் வாணி சரஸ்வதியே போற்றி

ஓம் வாக்கின் நாயகியே போற்றி


ஓம் வித்தக வடிவினளே போற்றி

ஓம் வித்யா லட்சுமியே போற்றி

ஓம் வெண்கலை பூண்டவளே போற்றி

ஓம் வெள்ளை மனத்தாளே போற்றி

ஓம் வெண்தாமரையினாளே போற்றி

ஓம் வீணை ஏந்தியவளே போற்றி

ஓம் வீட்டின்பம் தருவாய் போற்றி

ஓம் வேதத்தின் உட்பொருளே போற்றி

ஓம் வையம் வாழ்விப்பாய் போற்றி…





Comments

Popular posts from this blog

சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்...

பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை  பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...

5 Secrets of Navratri Rituals...

நவராத்திரி 5ம் இல்லத்தில் குறைவில்லாமல் செல்வ வளம் பெருக மகாலட்சுமியை வழிபாடு செய்வது எப்படி? எந்த இடங்களில் மகாலட்சுமி தங்கமாட்டாள்.. ஆதிசங்கரர் அருளிய இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் படித்து மகாலட்சுமியை வழிபட்டால் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை வழிபாடு

  இந்த வழிபாடு செய்வோர் இல்லத்தில் செல்வவளம் பெருகும். மகாலட்சுமி படத்தை கிழக்கு திசை நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் உங்களுக்கு எந்த மலர் கிடைக்கின்றதோ, அந்த மார்களை சாற்றி விளக்கு ஏற்றி, காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி என இதில் ஏதாவது ஒன்றை படித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தங்கள் இல்லத்தில் செய்கின்றனறோ, அங்கு செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஸ்லோகத்தை மனம் உருக உச்சரித்து வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும். மேலும் பதவி உயர்வு கிடைக்க , இல்லத்தில் லக்ஷ்மி கடாட்சம் பெருக – மந்திரம், ஸ்தோத்திரம், வழிபாடு! நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம: நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம: த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸ...



ஆன்மீகம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள்


Free beautiful png images from pikbest.com