இந்த வழிபாடு செய்வோர் இல்லத்தில் செல்வவளம் பெருகும்.
மகாலட்சுமி படத்தை கிழக்கு திசை நோக்கி வைத்து, செந்தாமரை, செவ்வந்தி, முல்லை, பிச்சி, மல்லிகை இவற்றில் உங்களுக்கு எந்த மலர் கிடைக்கின்றதோ, அந்த மார்களை சாற்றி விளக்கு ஏற்றி, காய்ச்சிய பாலை பிரசாதமாக படைத்து, லட்சுமி கவசம், அஷ்டோத்திரம், 108 போற்றி என இதில் ஏதாவது ஒன்றை படித்து வழிபாடு செய்யுங்கள். இந்த வழிபாட்டை எவர் ஒருவர் தங்கள் இல்லத்தில் செய்கின்றனறோ, அங்கு செல்வவளம் பெருகும் என்பது ஐதீகம். இந்த ஸ்லோகத்தை மனம் உருக உச்சரித்து வேண்டுபவருக்கு சகல சௌபாக்கியங்களும் கிட்டும்.
நமோ லக்ஷ்ம்யை மஹாதேவ்யை பத்மாயை ஸததம் நம:
நமோ விஷ்ணு விலாஸின்யை பத்மத்ஸாயை நமோ நம:
த்வம் ஸாக்ஷத் ஹரிவக்ஷஸ்தா ஸீர ஜ்யேஷ்டா வரோத்பவா
பத்மாக்ஷீ பத்ம ஸம்ஸாதாநா பத்மஹஸ்தா பராமயீ
பரமானந்ததா அபாங்கி ஹ்ருத ஸம்ஸ்ருத துர்கதி
அருணா நந்தினீ லக்ஷ்மீ: மஹாலக்ஷ்மீ: திரிஸக்திகா
ஸாம்ராஜ்யா ஸர்வ ஸுகதா நிதிநாதா நிதிப்ரதா
நிதீஸ பூஜ்யா நிகமஸ்துதா நித்திய மகோந்நதி
ஸம்பத்தி ஸம்மதா ஸர்வ ஸுபகா ஸம்ஸ்து தேஸ்வரி
ரமா ரக்ஷ்கரீ ரம்யா ரமணீ மண்டலோத்தமா
அன்னை மகாலட்சுமி உலகத்திலுள்ள எல்லா செல்வங்களிலும் குடி கொண்டிருப்பவள். அது மட்டும் இன்றி தனம், தான்யம், சந்தானம், சௌபாக்யம், வைராக்யம், தைரியம், வெற்றி, மன அமைதி … என எல்லாவற்றையும் வழங்குபவளும் அவளே.
ஏனென்றால், பாற்கடலில் பிறந்த திருமகளை அஷ்டலஷ்மியாக வழிபாடு செய்வார்கள். அதாவது தனலட்சுமி, தான்யலட்சுமி, சந்தான லட்சுமி, வீரலட்சுமி, வித்யா லட்சுமி, விஜய லட்சுமி, கஜ லட்சுமி, தைரியலட்சுமி என எட்டு நிலைகளிலும் அருள்பாளிக்கும் அவளை வழிபாடு செய்வதால், அஷ்ட ஐஸ்வரியங்களும் நமக்கு கிடைக்கப் பெறுவோம்.
ஆகவே இல்லம் லட்சுமி கடாட்சத்துடன் நிறைந்து இருக்க லட்சுமி தேவியை வரவேற்கும் எல்லா முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். தேவி லட்சுமிக்கு விருப்பமான பொருட்களான, நம் முன்னோர்கள் வலியுறுத்தும் பொருட்களை, நம் இல்லங்களில் வைத்தால், அதன் மூலம் தேவி லட்சுமி ஈர்க்கப்பட்டு, நம் இல்லத்தில் தங்குவார். இதனால் இல்லத்தில் செல்வவளம் பெருகும்.
கல் உப்பு
பாற்கடலில் பிறந்தவள் தான் அன்னை மகாலட்சுமி. அதுபோல கடலில் இருந்து கிடைக்கும் உப்பு மகாலட்சுமியின் வடிவமாக போற்றப்படுகிறது. எனவே, இது செல்வத்திற்கும், வளத்திற்கும் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது.
செல்வத்தின் இழப்பு:
அதனால் தான் பணத்தை போலவே, உப்பையும் கடனாகக் கொடுத்தால், இல்லத்தில் செல்வம் குறைந்துவிடும் என முன் ன்னோர்கள் கொல்லியிருக்கிறார்கள். ஆகையால் இது அன்னை மகாலட்சுமியின் அம்சத்தை இழப்பதைப் போன்றது என்று சொல்லப்படுவதால், உப்பைக் கடனாகக் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும்.
இனிப்பு (கல்கண்டு)
இனிப்பு பொருட்கள் மீது மிகுந்த பிரியத்துடன் வாசம் கொண்டிருப்பவள் தேவி லட்சுமி. கல்கண்டு உள்ளிட்ட இனிப்பு பொருட்களில் லட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.
மஞ்சள் - குங்குமம் இந்த இரண்டு பொருட்களிலும் அன்னை மகாலட்சமி வாசம் செய்வதாக ஐதிகம். இயற்கையாகவே மஞ்சள் ஒரு கிருமிநாசினி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
தாமரை, தானியக் கதிர், பால், தேன் மற்றும் நாணயங்கள் ஆகிய ஐந்தும் பஞ்ச லஷ்மியின் அடையாளங்களாகும். குறிப்பாக வெள்ளிக்கிண்ணத்தில் நாணயங்களை நம் இல்லத்தில் வைத்திருந்தால், செல்வம் கொழிக்கும். அதே வியாபார இடங்களில் வைத்திருந்தால் தொழிலில் உள்ள தடைகள் நீங்கி லாபம் கிடைக்கும்.
வில்வமரத்தில் அன்னை மகாலட்சுமி வசிப்பதால், அதற்கு ‘லட்சுமி வாசம்’ என்றும் ஒரு பெயர் உண்டு. அதாவது சாஸ்திர நூல்களில் வில்வம் மகாலட்சுமியின் இருப்பிடமாக கூறப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியை வில்வ இலையால் அர்ச்சிப்பவர்களுக்கு சகல செல்வங்களும் கிடைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை மாலை வேளையில் தாமரை வடிவிலான மகாலட்சுமி உரிய கோலம் போட்டு அதன் மீது ஐந்துமுக குத்துவிளக்கை ஏற்றி வழிபாடு செய்பவர்கள் இல்லங்களில் மகாலட்சுமி வாசம் செய்வாள். இவ்வாறு செய்வதன் மூலம் கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும் என்பதும் நம்பிக்கை.
யானைகள் செல்வத்தின் அடையாளமாக கருதப்ருகிறது. யானையை மகாலட்சுமியாகவும் போற்றப்படுகிறது.. மேலும் பூஜைகளின் தொடக்கத்தில் செய்யப்படும் கஜபூஜையால் மகிழும் அன்னை மகாலட்சுமி, அவ்விடத்தில் பரிவாரங்களுடன் எழுந்தருள்கிறாள்.
Comments
Post a Comment