சில எளிய பரிகாரங்கள்....
வீட்டின் நுழைவு வாயில்...
உங்கள் இல்லத்தின் நுழைவு வாயிலில் ஒரு வெற்று சுவர் இருந்தால், உங்கள் இல்லத்தில் தனிமை அதிகம் என்று அர்த்தம். ஆகையால் இல்ல வாசலில் விநாயகர் சிலை ஒன்றை வைத்தால், அது உங்கள் வீட்டில் மகிழ்ச்சியையும், அமைதியையும் பெற்றுத்தரும்.
படுக்கையறை...
உங்கள் இல்லத்தைக் கட்டும்போதோ அல்லது கட்டிய வீட்டை வாங்குபவராக இருந்தாலும் சரி, உங்கள் படுக்கையறை இல்லத்தின் தென்மேற்குப் பகுதியை நோக்கி இருக்க வேண்டும் என்பதைச் உறுதி செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் இது தனிப்பட்ட உறவுகளுக்கு நிறைய ஸ்திரத்தன்மையையும், மகிழ்ச்சியையும் தரக்கூடியதாகும். இவ்வாறு செய்வதால் உங்கள் செல்வச்செழிப்பை மேம்படுத்தும். மேலும் இது உங்கள் செல்வ வளத்தை கணிசமாக அதிகரிக்கச் செய்யும். பின்னர் படுக்கையறை எப்போதும் நன்கு ஒளிரும் வகையில் பிரகாசமான நிறத்தில் இருத்தல் அவசியம். மேலும் இருண்ட வரைபடங்களை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும், ஏனெனில் இது படுக்கையறைக்குள் நெகட்டிவ் எனர்ஜியை ஈர்க்கும்.
உடைந்த பொருட்கள்...
இல்லத்தில் உடைந்த பொருட்கள் வைத்திருப்பதைத் தவிர்க்க வேண்டும். அது ஒரு ஜன்னல், கண்ணாடி அல்லது ஒரு மரச்சாமானாக இருந்தாலும் சரி, உடைந்தவைகளை நீங்கள் விரைவில் அகற்றிவிட வேண்டும். எனென்றால், உடைந்த பொருட்கள் எதுவாயிருந்தாலும் அது நேர்மறை ஆற்றலின் எளிதான ஓட்டத்தைத் தடுக்கச் செய்கிறது. மேலும் உடைந்த பொருட்கள், உங்கள் குடும்பத்தின் செழிப்பு மற்றும் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என்பதால், அவற்றை இனி உங்கள் இல்லத்தில் ஒருபோதும் வைக்க வேண்டாம். அகற்றி விடுவது நல்லது.
சேமிக்கும் இடம்...
பெரும்பாலானோர் தங்கள் இல்லங்களில் அடிக்கடி பயன்படுத்தப்படாத தேவையான பொருட்களை சேமித்து வைப்பதற்கென ஒரு இடம் தேவைப்படுகிறது. ஆகவே, அந்த சேமிக்கும் இடத்தை மிகவும் புத்திசாலித்தனமாக உருவாக்க வேண்டும். இல்லத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒருபோதும் குப்பைகளை ஒதுக்கி வைக்கக்கூடாது. இது நேர்மறை ஆற்றல் பரவுவதை நிறுத்திவிடும்.
கண்ணாடி...
உங்கள் இல்லம் முழுவதும் பல கண்ணாடிகளை வைக்கலாம். இது உங்க வீடு முழுவதும் மிக அழகான தோற்றத்தை கொடுக்கும். இதனால் நேர்மறை ஆற்றல் பரவும். மேலும் உங்க இல்லமானது சிறந்த பலன்களை பெற கண்ணாடிகளை எங்கு வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள, வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசனையைப் பெறுவது அவசியமானது.
புத்தர் சிலை...
அமைதி மற்றும் நல் இணக்கத்திற்காக உங்கள் இல்லத்தில் பல புத்தர் சிலைகளை வைப்பதுவும் செழிப்பின் முக்கிய அடையாளமாக சொல்லப்படுகிறது. ஆகவே, உங்கள் இல்லத்தில் குறைந்தது ஒரு புத்தர் சிலையாவது இருத்தல் அவசியம். உங்கள் இல்லத்தில் தோட்டம் இருந்தால், அங்கு ஒரு புத்தர் சிலையை வைக்கலாம். இந்த புத்தர் சிலையை சரியான இடத்தில், சரியான திசையில் வைக்கப்படும் போது தான் உங்கள் இல்லத்திற்கு மகத்தான அமைதி, நல்லிணக்கம் மற்றும் செல்வம் போன்ற அற்புதமான மதிப்பைக் கொண்டு வரும்.
வடகிழக்கு திசை...
செல்வம், அமைதி மற்றும் செழிப்பு முதலியவற்றை ஈர்க்க உங்கள் சாப்பாட்டு அறையின் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் மிகப் பெரிய கண்ணாடியை அவசியம் வைக்க வேண்டும்.
குடும்பப் படங்கள்...
இல்லத்தின் தென்மேற்கு சுவரில் அமைதி, அன்பு மற்றும் உறவுகளை மேம்படுத்த உங்கள் குடும்பத்துடன் உள்ள புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை வைக்க வேண்டும்.
அமைதி மற்றும் நல் இணக்கத்திற்காக உங்கள் இல்லத்தில் பல புத்தர் சிலைகளை வைப்பதுவும் செழிப்பின் முக்கிய அடையாளமாக சொல்லப்படுகிறது. ஆகவே, உங்கள் இல்லத்தில் குறைந்தது ஒரு புத்தர் சிலையாவது இருத்தல் அவசியம். உங்கள் இல்லத்தில் தோட்டம் இருந்தால், அங்கு ஒரு புத்தர் சிலையை வைக்கலாம். இந்த புத்தர் சிலையை சரியான இடத்தில், சரியான திசையில் வைக்கப்படும் போது தான் உங்கள் இல்லத்திற்கு மகத்தான அமைதி, நல்லிணக்கம் மற்றும் செல்வம் போன்ற அற்புதமான மதிப்பைக் கொண்டு வரும்.
வடகிழக்கு திசை...
செல்வம், அமைதி மற்றும் செழிப்பு முதலியவற்றை ஈர்க்க உங்கள் சாப்பாட்டு அறையின் கிழக்கு அல்லது வடகிழக்கு திசையில் மிகப் பெரிய கண்ணாடியை அவசியம் வைக்க வேண்டும்.
குடும்பப் படங்கள்...
இல்லத்தின் தென்மேற்கு சுவரில் அமைதி, அன்பு மற்றும் உறவுகளை மேம்படுத்த உங்கள் குடும்பத்துடன் உள்ள புகைப்படம் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் புகைப்படத்தை வைக்க வேண்டும்.
Comments
Post a Comment