குலதெய்வ வழிபாடு என்பது எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பது அனைவருக்கும் தெரியும். நம்முடைய குலத்தை தழைக்க வைப்பதால் தான் அந்த தெய்வத்திற்கு குலதெய்வம் என்று பொருள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானருக்கு தங்களுடைய குலதெய்வம் எதுவென்றே தெரியாமல் அவதிப்படுகிறார்கள். இதற்கு அவர்கள் முன்னோர்கள் தொழில் தொடர்பாக இடம் விட்டு இடம் புலம் பெயர்ந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம். குலதெய்வம் தெரியாமல் போனதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், குலதெய்வ வழிபாடு செய்யவில்லை என்றால் நம்முடைய குடும்பத்தில் தொடர்ந்து பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் நம்மால் ஒரு நிலையில் நிற்க முடியாது. இந்த குலதெய்வம் எங்கு உள்ளது அதை எப்படி வணங்க வேண்டும் என்பதை எல்லாம் குலதெய்வமே நேரில் வந்து உங்களுக்கு அருள் பாலிக்க இந்த பரிகாரம் பெயர் உதவியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அத்தகைய அருமையான ஒரு பரிகாரத்தை பற்றி தான் இப்போது இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.
பஞ்சமியும், புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... புரட்டாசி 2ம் சனிக்கிழமை பெருமாளை இப்படி வழிபாடு செய்யுங்கள்... இந்து மதத்தில் ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. அதுபோலத் தான், ஒவ்வொரு தமிழ் மாதத்திற்கும், அதற்கென்று சில சிறப்பம்சங்கள் இருக்கின்றன. அவை நம்முடைய உள்ளத்தில் பக்தியைத் தூண்டும் விதமாக அமைந்திருக்கின்றது. அந்த வகையில் புரட்டாசி மாதம் சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது. புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடு தான் அனைவரது உள்ளத்திலும் நிறைந்து இருக்கும் விஷ்ணு பகவான் வேங்கடேஸ்வரராக இந்த பூமியில் தோன்றிய மாதம், இந்த புரட்டாசி மாதம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த புரட்டாசி மாத விரதத்தை முறையாகக் கடைப்பிடிப்பதன் மூலம் சனி தோஷ நிவர்த்தி, செல்வ வளம், மன அமைதி போன்ற பலன்களைப் பெறலாம். மேலும் புரட்டாசி சனிக்கிழமை விரதம் மேற்கொள்வது மிகவும் புண்ணியச் செயலாகும். ஆகவே புரட்டாசி மாதம் என்றாலே அனைவரது நினைவிற்கும் வருவது பெருமாள் தான். புரட்டாசி மாதம் முழுவதுமே பெருமாளை வழிபாடு செய்வதற்கு ஏற்ற திருநாள் என்றாலும், புரட்டாசி சனிக்கிழமைகளில் வழி...
Comments
Post a Comment